ஏப்ரல் 21 ஈஸ்டர் தாக்குதல் சம்பவங்கள் போன்று மீண்டும் இடம்பெறாதிருப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அவை தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.
குறித்த அறிக்கை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தாக்குதல்கள் குறித்து ஆராயும் விசேட பாராளுமன்றக் குழுவின் தலைவரும், பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கை 200 பக்கங்களைக் கொண்டுள்ளதாகவும் அமையப்பெற்றுள்ளது.