“கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அடுத்த மாத இறுதிக்குள் மீளத் திறக்க அரசு எதிர்பார்த்துள்ளது.”
– இவ்வாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமையவே இது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்குள் அழைப்பதற்கான ஏற்பாடுகளின்போது நாட்டு மக்களின் பாதுகாப்பு கருத்தில்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் இலங்கையின் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.