கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த மேலும் 06 பேர்..!

5 8

கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 06 பேர் குணமடைந்துள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 2811 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் இதுவரை 2 ஆயிரத்து 953 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் அதில் 130 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை 55 பேர் தற்போது சந்தேகத்தின் அடிப்படையில் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள நிலையில் 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.