குளவி கொட்டுக்கு இலக்கான நபர் மருத்தவமனையில்

k
k

குளவி கொட்டு தாக்குதலுக்கு பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவரின் மூக்கு வழியாக 11 குளவிகள் வெளியேற்றப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதுளையில் இடம்பெற்றுள்ளது

குறித்த நபர் இன்றைய தினம் கலஉட மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டதனை தொடர்ந்து இவ்வாறு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

70 வயதுடைய நபரே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.

மருத்துவர்கள் மூன்று பேர் இணைந்து குறித்த சிகிச்சையினை மேற்கொண்டு 2 மணித்தியாலங்களின் பின்னர் இவ்வாறு குளவிகளை வெளியேற்றியுள்ளமைகுறிப்பிடத்தக்கது

குறித்த நபர் கலஉட பிரதேசத்தில் உள்ள வன பகுதிக்கு சென்றுள்ள நிலையில் இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.