ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு

download 2 7
download 2 7

நாடாளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன மற்றும் ஹேஷா வித்தானகே ஆகியோரை அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அடுத்த மாதம் 3 ஆம் திகதி குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் சுங்க பணிப்பாளர் நாயகம் ஜகத் பீ. விஜேவீர முன்வைத்துள்ள முறைப்பாட்டுக்கு அமைய இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சந்தஹிரு சேயேவில் வைப்பிலிடுவதற்காக இலங்கை சுங்கத்தின் பொறுப்பில் இருந்த தங்கத்தை சட்டவிரோதமாக வழங்கியதாக தமக்கு எதிராக கடந்த நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை அரசியல் பழிவாங்கள் என அவர் தமது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.