போகஹகும்புர – ரஹங்கல வனப்பகுதியில் திடீர் தீ

bbbbbbbbb

போகஹகும்புர – ரஹங்கல வனப் பகுதியில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீப்பரவல்  நேற்று திங்கட்கிழமை இரவு 7 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், வனப்பாதுகாப்பு அதிகாரிகள், வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து குறித்த தீயைக் கட்டுப்பாட்டக்குள் கொண்டு வந்துள்ளனர். தீப்பரவலால் உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லையென பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.