கொழும்பு கோட்டை அதியுயர் பாதுகாப்பு வலய கடற்பகுதிக்குள் அனுமதியின்றி சென்ற வெளிநாட்டவர் உட்பட 13 பேர் கடற்படையினரால் கைது.
இவர்கள் நேற்று (திங்கட்கிழமை) மாலை இரண்டு படகுகளில் பயணித்துக்கொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர் என கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இவர்கள் இடையில் கொழும்பில் உள்ள பிரதான ஹோட்டல் ஒன்றின் ஊழியர்கள் சிலரும் இருந்துள்ளனர். புகைப்படம் எடுப்பதற்காக இவர்கள் கடலுக்குள் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட அவர்கள் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.