பாராளுமன்றம் நாளை (வியாழக்கிழமை) காலை 9.30 க்கு கூடவுள்ளது.
இதன்போது செப்ரெம்பர் முதலாம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரையான கால எல்லைக்கான இடைக்கால கணக்கு அறிக்கை முன்வைக்கப்படவுள்ளது.
வெகுஜன ஊடக அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து சமர்பிக்கப்பட்ட இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதம் நாளையும், நாளை மறுதினமும் (வெள்ளிக்கிழமை) இடம்பெறவுள்ளன.
மேற்குறித்த இரண்டு தினங்களிலும் காலை 9.30 முதல் மாலை 6.30 வரை இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.