பொகவந்தலாவ-கிவ் தோட்டத்தில் வேலை செய்துக்கொண்டிருந்த பெண்கள் மீது சிறுத்தையொன்று தாவியதில் இரண்டு பெண்கள் காயமடைந்துள்ளனர்.
இவ்வாறு காயத்திற்குள்ளான இரண்டு பெண்களும் பொகவந்தலாவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த சிறுத்தை எதிர்பாராத விதமாக குறித்த பெண்கள் மீது தாவிச் சென்றுள்ளதாக காயமடைந்த பெண்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.