மேல் கொத்மலை நீர்தேக்கத்திற்கு கழிவுகளை விடுவிக்கும் வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளுக்கு தலவாக்கலை-லிந்துலை நகர சபையினால் சிவப்பு எச்சரிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
நகர சபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரும் பொது சுகாதார ஆய்வாளர்களால் வெளியிடப்பட்ட தகவல்களுக்கமைய தலவாக்கலை நகரில் உள்ள சுமார் 40 வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் இவ்வாற கழிவுகளை மேல் கொத்மலை நீர் தேக்கத்தில் விடுவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமையவே குறித்த வீட்டின் மற்றும் வர்த்தக நிலைஙங்களின் உரிமையாளர்களுக்கு இந்த சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.