அடுத்த நான்கு மாதங்களுக்கான அரசாங்க செலவீனங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதம் இன்று நாடாளுமன்றில் இடம்பெற்றது.
இன்று காலை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ சபையில் முன்வைத்துள்ளார்.
நாளைய தினம் தொடர்ந்தும் விவாதம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவாதத்தில் கலந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களான அதாவுல்லா, பைசால் காசிம், மருதபாண்டி ராமேஸ்வரன், எம்.எஸ்.தௌபிக், ஏ.அரவிந்த்குமார் ஆகியோரும் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.