நவகமுவ பகுதியில் கஞ்சா போதைப் பொருளுடன் பாதாள குழுவுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நவகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று புதன்கிழமை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெள்ளம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் , இவரிடமிருந்து 3 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர் பாதாளகுழு செயற்பாடுகளுடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. அவர் தொடர்பான மேலதிக விசாரணைகளை நவகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.