மத்திய கிழக்கிலிருந்து 231 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

srilankan airlines 1

மத்திய கிழக்கில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கட்டார் மற்றும் சவுதி அரேபிய ஆகிய நாடுகளுக்கு தொழில்வாய்ப்புக்காக சென்ற 231 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

அதன்படி ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான ஈ.கே.-648 என்ற விமானத்தில் மொத்தம் 42 இலங்கையர்கள் அதிகாலை 1.26 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அதேபோல் டோஹாவிலிருந்து கட்டார் ஏயர்வேஸ் விமான சேவைக்கு சொந்தமான கியூஆர் -688 என்ற விமானத்தில் 22 இலங்கையர்கள் அதிகாலை 1.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இது தவிர சவுதி அரேபியாவின் டம்மாமிலிருந்து ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யுஎல் -264 என்ற விமானத்தில் 167 இலங்கையர்கள் அதிகாலை 5.40 மணிக்கு மத்தள விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இந்த குழுவில் இரண்டு குழந்தைகளும் அடங்கும்.

விமான நிலையத்தை வந்தடைந்த அனைத்து பயணிகளும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.