விஜிராபுற பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் தீ பரவல்!

ej
ej

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட விஜிராபுற பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று வெள்ளிக் கிழமை பிற்பகல் 2.30மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

ஹட்டன் விஜிராபுற பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்தவர்கள் வெளியில் சென்றிருந்த வேளை குறித்த வீட்டில் தீ பரவல் சம்பவம் ஏற்பட்டுள்ளது.

தீயினால் வீட்டில் இருந்த உடமைகள் எரிந்து நாசமாகியுள்ளது. எனினும் வீட்டில் எவரும் இல்லாத காரணத்தினால் யாரிற்கும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

மின்சாரக் கோளாறு காரணமாகவே இந்த தீப் பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீயினை கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.