சலுகை அடிப்படையிலான மோட்டார் வாகன உரிமைப்பத்திரங்களை பயன்ப்படுத்தி உள்நாட்டில் வரிசலுகையுடன் புதிய வாகனம் ஒன்றை கொள்வனவு செய்வதற்கான விசேட திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த நிதி அமைச்சகம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய,வாகன உரிமையாளர்கள் தம்மிடம் உள்ள வாகன இறக்குமதி சலுகை பத்திரத்தினை கொண்டு உள்ளூர் வாகன விற்பனையாளர்களிடம் வரி சலுகையுடன், புதிய வாகனம் ஒன்றினை கொள்வனவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.