போதைப்பொருள் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படும் இடம் மற்றும் நேரம் தொடர்பான தகவல்களை, காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் தரவு குறிப்பு புத்தகத்தில் மாற்றம் செய்திருந்ததாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் முன்னாள் காவல்துறை பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான முழுமையான தகவல்கள், போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு கிடைப்பதை தடுக்கும் நோக்கிலேயே இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தாக அவர் தெரிவித்துள்ளார்.