போதையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற ஓட்டோ சாரதி கைது!

arrested2 2
arrested2 2

மதுபானம் அருந்திய நிலையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற ஓட்டோ சாரதி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இன்று பலாங்கொடை, தும்பகொடை பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற ஓட்டோ வீதியில் ஒழுங்கீனமாகச் சென்றதை அவதானித்த பிரதேசவாசிகள், கடமையில் இருந்த போக்குவரத்துப் பொலிஸாருக்கு அறிவித்ததற்கு இணங்க பின்தொடர்ந்து வந்த போக்குவரத்துப் பொலிஸார் ஓட்டோ சாரதியைக் கைதுசெய்துள்ளனர்.

சந்தேகநபர் விசாரணைகளின் பின்னர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார் என்று தெரிவித்த பொலிஸார், ஓட்டோ பொலிஸ் நிலையக் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது எனவும் கூறினர்.