நேற்றிரவும் பாதாள உலகக்குழு உறுப்பினர் ‘இந்ர’ துப்பாக்கிச் சூட்டில் பலி

6 2

பொலிஸாரிடம் இருந்து தப்பி செல்ல முற்பட்ட நபர் ஒருவர் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

நவகமுவ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்துநில் வஜிர குமார எனும் ´இந்ர´ என்கின்ற நபரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

கொலை, கொள்ளை, கப்பம் பெறல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களில் தேடப்பட்டு வந்த குறித்த நபர் நவகமுவ பகுதியில் 10 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.