நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டோரின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 849ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் ஏழு பேர் குணமடைந்து இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
இதேவேளை, நாட்டில் இதுவரை இரண்டாயிரத்து 989 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் இன்னும் 128 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 12 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.