தங்கொட்டுவையில் திடீர் தீப்பரவல்

16 2

தங்கொட்டுவ – கலுவச்சிமுல்ல பகுதியில் ஏற்பட்ட திடீர் தீப்பரவலால் மின் உபகரண பழுது பார்க்கும் நிலையமொன்றும் வீடொன்றும் பாரிய சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தங்கொட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருநாகல் – நீர்கொழும்பு பிரதான வீதியில் கலுவச்சிமுல்ல பகுதியில் நேற்று சனிக்கிழமை காலை 8.45 மணியளவில் திடீர் தீரப்பரவல் ஏற்பட்டுள்ளது.

பொலிஸ் மற்றும் பிரதேசவாசிகளால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மின் கசிவு தீப்பரவலுக்கு காரணமாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதன்போது உயிர் சேதங்கள் ஏற்படவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்கொட்டுவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.