குற்றச் செயல்களில் ஈடுபடும் பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவரான “கெசல்வத்த தினுக”வின் உதவியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடவத்த பகுதியில் வைத்து பொலிஸ் விஷேட அதிரடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்ததடுப்பு பிரிவினரால் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது ஒருவரிடம் இருந்து 11 கிராம் 180 மில்லிகிராம் ஹெரோயினும் மற்றயவரிடமிருந்து 1 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கடவத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.