மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை அரசாங்கம் தவறாக பயன்படுத்துவதாக எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றச்சாட்டியுள்ளார்.
வட கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
பெரும்பான்மை ஆதரவு கிடைக்கப் பெற்றுள்ளது என்ற காரணத்தினால் அரசாங்கம் தான்தோன்றித்தனமாக செயற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.
மக்களை ஒன்றுத்திரட்டி கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்துவோம்.
மக்களின் உரிமைகளையும், நிவாரணங்களையும் பலமான எதிர் கட்சியாக செயற்பட்டு பெற்றுக் கொடுப்போம் என்பதை உறுதியாக குறிப்பிட்டுக் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.