13ஆவது திருத்தச் சட்டத்தை மாற்ற நினைப்பது நாட்டை மீண்டும் இருண்ட யுகத்திற்குள், போராட்டக் களத்திற்குள் தள்ளிவிடும் முயற்சியே என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பல தியாகங்களிற்குப் பின்னர், பல பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், இந்திய – இலங்கை அரசுகளுக்கிடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் இதுவே அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.