தவறுதலாக துப்பாக்கி இயங்கியதில் நபர் ஒருவர் பலி!

dead body2
dead body2

பசறை – ரிக்கட்டுதுவ பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று தவறுதலாக இயங்கியதில் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதேநேரம், சம்பவத்தில் உயிரிழந்தவரின் இரண்டரை வயது மகனும் காயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மதுபோதையில் வீட்டுக்கு சென்ற தந்தை துப்பாக்கியை வைத்திருந்த நிலையில் தனது மகனை தூக்கியபோது, துப்பாக்கி தவறுதலாக இயங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, 29 வயதான தந்தையே உயிரிழந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்