காலி – அக்மீமன பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றில் பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசாரத்தில், 2 பெண்கள் உட்பட 28 பேர் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அக்மீமன காவல்துறையினர் இன்று அதிகாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
இதன்போது, 10 கிராமுக்கும் அதிகளவான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்கள், அம்பாறை, கண்டி, மொரட்டுவை, அநுராதபுரம் முதலான பகுதிகளை சேர்ந்த 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கைதானவர்கள் அனைவரும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை இன்றைய தினம் காலி மேலதிக நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.