கொடிகாவத்தையில் அமைந்துள்ள இரவு ஹோட்டல் ஒன்றில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த ஹோட்டலின் உரிமையாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொடிகாவத்தை சந்தியில் அமைந்துள்ள தற்காலிக இரவு ஹோட்டலில் இன்று 30 அதிகாலை இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உணவு வாங்குவதற்காக ஹோட்டலுக்கு வந்த இளைஞன் ஒருவனுக்கும் மற்றும் ஹோட்டல் உரிமையாளருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் நீண்டதில் இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பின்னர் குறித்த இளைஞர் மேலும் சிலரை அழைத்து வந்து ஹோட்டல் உரிமையாளரை தாக்கியுள்ளார்.
தாக்குதலில் ஹோட்டல் உரிமையாளர் உயிரிழந்துள்ள நிலையில் அவர் கொடிகாவத்தை பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில், வெல்லபிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.