லோட்டஸ் வீதியை மறைத்து பல்கலைகழக மாணவர்களினால் முன்னெடுப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது 26 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மஹபொல புலமைபரிசில் மாதந்த தொகையை அதிகரிக்குமாறு கோரியும் காலதாமதம் இன்றி வழங்குமாறு கோரியும் பல்கலைகழக மாணவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
தேர்தல் காலத்தில் வீதியை மறைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காரணத்தினால் குறித்த மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.