இடைத்தேர்தல் முடிவுகள் வெளியீடு

eci
eci

தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் கடந்த 21ம் திகதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.

நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 32 ஆயிரத்து 333 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன், 44 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

புதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் 7171 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ரெட்டியார்பட்டி நாராயணன்
முத்தமிழ்ச்செல்வன்
ஜான்குமார்