பங்களாதேஷ் கிரிக்கட் அணி வீரர்கள் மேற்கொண்டிருந்த எதிர்ப்பு நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.
குறித்த அணியினருக்கும் பங்களாதேஷ் கிரிக்கட் கட்டுபாட்டு சபையின் பிரதான நிறைவேற்று அதிகாரி நசமுல் அசான் இற்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையினை தொடர்ந்து இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த பேச்சுவார்த்தை நேற்று மாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பங்களாதேஷ் கிரிக்கட் அணியினரின் பிரச்சினைகள் குறித்து ஆராய அந்நாட்டு கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் மஸ்ரசி மொடாசியை அந்நாட்டு பிரதமர் ஷிக் ஹசீனா நியமித்ததனை தொடர்ந்து எதிர்ப்பு நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.