வவுனியா கணேசபுரம் பகுதியில் நேற்று மதியம் பெய்த கடும்காற்றுடன் கூடிய மழையினால் பல வீடுகளின் கூரை தகடுகள் காற்றில் அடித்துச்செல்லபட்டுள்ளதுடன் பயன்தரும் மரங்களும் முற்றாக சரிந்துள்ளன.
அந்தவகையில் கணேசபுரத்தில் வீசிய கடும்காற்றினால் 34வீடுகளும், சமயபுரத்தில் 4 வீடுகளும் சேதமடைந்துள்ளது. குறித்த வீடுகளின் கூரைத்தகடுகள் தூக்கி வீசப்பட்டமையால் வீடுகளிற்குள் தண்ணீர் சென்றுள்ள நிலையில் மக்கள் இருப்பதற்கு வசிப்பிடமின்றி அசௌகரியங்களிற்குள்ளாகியுள்ளனர்.
இதேவேளை பலமான காற்று வீசியதால் வாழை,தென்னை போன்ற பயன்தரும் மரங்களும் முறிந்து விழுந்துள்ளது.
இதேவேளை பாதிப்பு விபரங்கள் தொடர்பாக மாவட்ட அனர்த்தமுகாமைத்துவப்பிரிவு தகவல்களை சேகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் பரவலாக இன்றைய தினம் இடிமின்னலுடன் கூடிய மழை பொழிந்துள்ளதுடன். சில பகுதிகளில் கடுமையான காற்றும் வீசியிருந்தமை குறிப்பிடதக்கது.