இரண்டு மாகாண ஆளுநர்கள் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதற்கமைய வடமேல் மாகாண ஆளுநராக இருந்த ஏ.ஜே.எம். முஸம்மில் ஊவா மாகாண ஆளுநராக
நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
அதேவேளை, ஊவா மாகாண ஆளுநராக இருந்த ராஜகொல்லுரே வடமேல் மாகாண ஆளுநராக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.