அமைச்சு பதவிக்கு பதிலாக வேறு பதவி வழங்க நடவடிக்கை : பிரதமர்

kljh
kljh

ஸ்ரீலங்கா சுநத்திர கட்சியினால் எந்தக் கோரிக்கையும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அமைச்சு பதவி வழங்குமாறு விடுக்கவில்லை என கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர் குறிப்பிட்டுள்ளார்

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதானிகளுடன் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், மைத்திரிக்கு பதவி வழங்குவது தொடர்பில் பிரதமரினால் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை அமைச்சர் பதவி ஒன்றை முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்குவதற்கு பதிலாக வேறு பதவி ஒன்றை உருவாக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கருத்து தெரிவித்தார் என்றும் தயாசிறி ஜயசேகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்