வேலையில்லா பட்டதாரிகளிற்கான நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வு வவுனியா மாவட்டசெயலகத்தில் இன்று இடம்பெற்றது.
தொழில் பெறும் 50 ஆயிரம் பட்டதாரிகளின் பெயர் விபரங்கள் உள்ளூராட்சி மாகாணசபை அமைச்சின் இணையத்தளத்தில் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது.
அந்தவகையில் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த 200 ற்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கு நியமன கடிதங்களை நிகழ்வில் அதிதிகளாக கலந்து கொண்ட அரச அதிபர் சமன்பந்துலசேன, மேலதிக அரச அதிபர் திரேஸ்குமார், பிரதேச செயலாளர்களான க.சிவகரன், இ.பிரதாபன், நா.கமலதாசன், பிரதி தேர்தல் ஆணையாளர் லலித் ஆனந்த மற்றும் இராணுவ அதிகாரிகள் ஆகியோர் வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது