மோட்டார்சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழப்பு

jjj
jjj

மோட்டார்சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் வீதியில் குறுக்கே சென்ற மாட்டுன் மோதி கீழே வீந்த நிலையில் எதிரே வந்த பேரூந்து அவர்கள் மீது மோதியதில் இருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு ஸ்ரீ முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த 20 வயதுடைய கிருஷ்ணபிள்ளை நிரோஷன் மற்றும் 22 வயதுடைய கருணாகரன் சுலோஷசன் என்பவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் தாளங்குடா பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பை நோக்கி மோட்டர்சைக்கிளில் தலைக்கவசம் இன்றி பயணித்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.இதனை அடுத்து அங்கு ஒன்று கூடிய பொதுமக்கள் கோபமடைந்து பேரூந்து மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து அங்கு பதற்றம் நிலை ஏற்பட்டது காத்தான்குடி காவல் துறையினர் அந்த நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து பேரூந்து சாரதியை கைது செய்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .