நுண்கலை செயன்முறை பரீட்சை தொடர்பான அறிவித்தல்

ol 1
ol 1

2019 கல்வி பொது தராதர சாதாரண நுண்கலை செயன்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் 28ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 8ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.

நாடளாவிய ரீதியில் ஆயிரத்து 295 மத்திய நிலையங்களில் நடைபெறும் இப் பரீட்சையில் 174,778 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.

பாடசாலை அதிபர்களுக்கும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ள பரீட்சை அனுமதிப் பத்திரத்தில் பாடத்திருத்தம், மொழியில் மாற்றம் அல்லது வேறு ஏதேனும் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமாயின் உடனடியாக பரீட்சை திணைக்களத்தின் பாடசாலை பரீட்சை பிரிவு மற்றும் பெறுபேறு கிளைக்கு சமர்ப்பித்து திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.