அரபு இராச்சியத்தில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பு சம்பவத்தில் இலங்கையை செர்ந்த நபர் ஒருவர் பலி!

Death body 720x450 1
Death body 720x450 1

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இலங்கையை செர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் மாத்தறை-வெலிகம பகுதியை சேர்ந்த 28 வயதுடைய நபர் என கூறப்பட்டுள்ளது.

குறித்த இளைஞர் கடந்த 2014 ஆம் அண்டு முதல் முதலில் வெளிநாடு சென்று 2019 ஆம் ஆண்டும் நாடு திரும்பி அதே ஆண்டு மீண்டும் வெளிநாடு சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அந்த நாட்டில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் இந்த இளைஞர் உயிரிழந்ததாக அவரது நண்பர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

எனினும் அவரது குடும்ப உறுப்பினர்கள் இதனை ஏற்றுக்கொள்ளாத நிலையில் அந்த இளைஞன் தொடர்பில் பல தேடல்களை மேற்கொண்டுள்ளனர்.