மூன்று மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது!

202006031504568144 Tamil News Meensurutty near alcohol sales arrest SECVPF
202006031504568144 Tamil News Meensurutty near alcohol sales arrest SECVPF

வடமேல் மாகாணத்தின் பாடசாலை ஒன்றில் தரம் 05 இல் கல்வி கற்கும்  மூன்று மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் குறித்த பாடசாலையின் பாதுகாவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சந்தேக நபர் 39 வயதானவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களிடம் வாக்குமூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், சம்பவம் தொடர்பில் வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக சந்தேக நபர் மற்றும் குறித்த மாணவிகள் குருநாகல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.