திஸ்ஸமஹாராம, பன்னேகமவ மற்றும் தெம்பரவெவ ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது ஐஸ் ரக போதைப்பொருளுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினர் மற்றும் கதிர்காமம் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இணைந்து இந்த சுற்றிவளைப்பினை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பன்னேகமுவ பிரதேசத்தில் இருவரை சோதனைக்குட்படுத்தியதில் அவர்களிடம் இருந்து 09 கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்களிடம் பெறப்பட்ட தகவல்களுக்கு அமைய 06 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளிள் தெரியவந்த தகவல்களுக்கு அமைய மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த நபரொருவர் 681 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.