24 மணிநேரம் ஆகியும் கோட்டாவிடமிருந்து பதிலில்லை- சஜித்

Sajith 2
Sajith 2

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவை நேருக்கு நேர் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்து 24 மணித்தியாலங்கள் கடந்துள்ள நிலையிலும் அவர் எவ்வித பதிலையும் அளிக்கவில்லையென புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவை நேருக்கு நேர் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு நேற்றுமுன்தினம் தமது உத்தியோகப்பூர்வ ருவிட்டர் மூலம் சஜித் பிரேமதாச அறிவித்திருந்தார்.

இதற்கு பதில் எதுவும் வராத நிலையில் நேற்று பிற்பகல் மீண்டும் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

கோத்தாபய ராஜபக்சவை நேருக்கு நேர் விவாதத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்து 24 மணித்தியாலங்கள் கடந்துள்ளது. ஆனால், அவர் எவ்வித பதிலையும் அளிக்கவில்லை. கருத்துக்களை வெளியிட முடியாது அச்சத்துடன் ஓடுவதும் சவால்களை எதிர்கொள்ள முடியாதவர்களும் ஜனாதிபதியாக தகுதியற்றவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.