ஹெரோயினுடன்பெண் கைது

arrest 5
arrest 5

திருகோணமலை நகரில் தலைமையகப்பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சுமேத்ரா கம பிரதேசத்தில் 640 மில்லி கிராம் ஹெரோயினுடன் 51 வயதான ஒரு பெண்னை தாம் கைது செய்ததாக தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் நீண்ட காலமாக போதை பொருள் வியாபாரம் செய்து வந்ததாகவும் ஹெரோயினை தமது வாடிக்கையாளருக்கு விற்பனை செய்யும் நோக்கத்தில் அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த நிலையில் ஹெரோயினை கைப்பற்றி போதை பொருள் வியாபாரியை கைது செய்ததாக தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவரையும் கைப்பற்றப்பட்ட போதை பொருளையும் திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி நடவடிக்கை மேற்கொள்வதாக தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.