கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 11 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதையடுத்து, வைரஸ் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 918ஆக அதிகரித்துள்ளது.
மேலும் நாட்டில் இதுவரை வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட மூவாயிரத்து 115பேரில் இன்னும் 185 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.