நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவுர்தி மீது பொலிஸ் அதிகாரி மோதி விபத்து!

171577 accident01
171577 accident01

கிளிநொச்சி ஏ-9 வீதியின் கரடிப்போக்கு சந்திக்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவுர்தி மீது அதே வழியாக வந்த சொகுசு கார் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று இரவு 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் சாரதிக்கு எந்தவித காயமும் இல்லாது துரதிஷ்டவசமாக தப்பியுள்ளார்.

விபத்துக்குள்ளான காரை செலுத்த வந்த சாரதி கிளிநொச்சி பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என்பது ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.