அமெரிக்க அதிபர் தேர்தலில் மிகப்பெரிய சதி திட்டம் தீட்டியுள்ள சீனா:ரொபேர்ட் ஓ பிரையன்!

b083fe955fbe1abbf48002
b083fe955fbe1abbf48002

நடைபெற இருக்கின்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் இடையூறு ஏற்படுத்த சீனா மிகப்பெரிய சதி திட்டம் தீட்டியுள்ளதாக வெள்ளை மாளிகை பாதுகாப்பு ஆலோசகர் ரொபேர்ட் ஓ பிரையன் தெரிவித்துள்ளார்.

தமக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வுக்குழுவின் தகவலை மேற்கோள் காட்டியே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

அமெரிக்க அதிபர் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியில் ஈரான், ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தீவிர திட்டம் தீட்டி வருகின்றன.

அமெரிக்காவில் அரசியல் ரீதியாக பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலேயே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதேவேளை அமெரிக்காவில் உள்ள இணையத்தளங்களை ஹக் செய்யும் முயற்சியிலும் சீனா ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக நாங்களும் விழிப்பாக இருக்கிறோமென அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அமெரிக்கா கூறும் குற்றச்சாட்டினை சீனா மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.