வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் மீள் குடியேற்ற கிராமமான
குகனேசபுரம் கிராமத்தில் குளத்தில் நீராடச் சென்ற சிறுமி நீரில் மூழ்கி மரணமடைந்த சம்பவம் ஒன்று நேற்று (05) மாலை இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது குகனேசபுரம் காலிகோவில் வீதி 06ம் குறுக்கை சேர்ந்த சன்முகநாதன் விஜய ரூகினியும் அவரது சகோதரியும் நேற்று மாலை ஆலம்குளத்திற்கு குளிக்கச்சென்ற போதே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வருவதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
ஆலம்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 06 ல் கல்வி பயின்று வந்த சன்முகநாதன் விஜய ரூகினி (வயது 12) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
.