விபத்தில் சிக்கிய நோயாளர்காவு வண்டி

625.0.560.320.160.600.053.800.700.160.90 1
625.0.560.320.160.600.053.800.700.160.90 1

பருத்தித்துறை – மந்திகை ஆதார வைத்தியசாலையின் நோயாளர்காவுவண்டி ஒன்று விபத்துக்குள்ளாகி சேதமடைந்துள்ளது.

குறித்த விபத்துச்சம்பவம் இன்று அதிகாலை 1.30 மணியளவில் இமையாணன் குஞ்சர் கடை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மந்திகை ஆதார வைத்தியசாலையில் இருந்து அவசர நோயாளி ஒருவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்துவிட்டு மீண்டும் மந்திகை நோக்கிப் பயணித்த போது, சில்லு ஒன்றின் காற்று வெளியேறிய நிலையில் நோயாளர் காவு வண்டி விபத்துக்குள்ளாகியது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தினால் நோயாளர் காவு வண்டியின் முன்பக்கம் பலத்த சேதமடைந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்..

கடந்த வருடம் மத்திய சுகாதார அமைச்சினால் மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட நவீனரகநோயாளர்காவுவண்டியே இவ்வாறுவிபத்தில் சேதமடைந்துள்ளது.