அனைவருக்கும் வீடு’ செயற்றிட்டத்தின் முதற்கட்ட பணிகள் ஆரம்பம்

Untitled 3
Untitled 3

அனைவருக்கும் வீடு’ என்ற செயற்றிட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடமைப்புக்கான உதவிகளை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 113 குடும்பங்களுக்கு, ஆறு லட்சம் ரூபாய் பெறுமதியான வீடுளை நிர்மாணிப்பதற்கான முதலாம் தவணை கொடுப்பனவு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு, நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் இன்று காலை யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் .எஸ்.நிக்கொலஸ்பிள்ளை, வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் மு.ரவீந்திரன், வீடமைப்பு அதிகார சபை அதிகாரிகள் மற்றும் அரச அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்