552 பேர் தனிமைப்படுத்தலில் இருந்து வெளியேறினர்

ccccccccc
ccccccccc

நாட்டில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 552 பேர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளதாக கொரோனா தொற்றை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது

அதனடிப்படையில் இதுவரை 37 ஆயிரத்து 552 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்து வெளியேறியுள்ளனர் என்றும் 7ஆயிரத்து 403 பேர், 70 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது .

இதே நேரம் நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை மூவாயிரத்து 121 தொற்றாளர்கள் என்றும்
குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 918 பேரும் மற்றும் 191பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது .