வீதி விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு

data original
data original

மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலை, ஆறுமுகத்தான்குடியிருப்பில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,

கிறிஸ்தவ தேவாலயத்தின் ஆராதனையில் பங்குகொண்டு தனது சைக்கிளில் பிரதான வீதியூடாக வீடு திரும்பும்போது, பின்னால் வந்த டிப்பர் ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

கொம்மாதுறை கலைவாணி வீதியைச் சேர்ந்த கிட்ணபிள்ளை குபேந்திரன் என்னும் 46 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் ஏறாவூர் ஆதரார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தினுடைய சாரதியை கைது செய்து ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது .