நாடு முழுவதும் தற்போது பெய்துவரும் மழையுடனான காலநிலை தொடர்ந்து நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, நாட்டின் சில பகுதிகளில் 1500 மில்லிமீற்றருக்கு அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காற்றின் வேகமானது மணிக்கு 50-60 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.