இந்திய கடலோர பாதுகாப்பு படையினரால் இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது!

201806191312117543 Coast Guard rescued 9 stranded Tamilnadu fishermen SECVPF
201806191312117543 Coast Guard rescued 9 stranded Tamilnadu fishermen SECVPF

கடற்றொழில் நடவடிக்கைக்காக தெவிநுவர – புராணவெல்ல கடற்றொழில் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு சென்ற இந்துவர நெடுநால் படகு மற்றும் அதிலிருந்த 6 மீனுவர்களும் இந்திய கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் 28 ஆம் திகதி மீனவர்களுடன் குறித்த படகு கடலுக்கு சென்றுள்ள நிலையில் ஜூலை மாதம் 12 ஆம் திகதி தாம் கைது செய்யப்பட்டுள்ளதாக வானோலி தொடர்பு சாதனம் மூலம் கைதானவர்கள் அறிவித்துள்ளனர்.

கைதான மீனவர்கள் தற்போது இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் காதிநகர் பகுதியில் அமைந்துள்ள சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ள போதும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என கைதானவர்களின் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.